கருக்கலைப்பு கொடிய பாவம் நீஅறி பெண்ணென் றேனே - நேரிசை ஆசிரியப்பா

தொலைபே சியுரை யாடல் ஒன்றை
காலையில் கேட்டேன்; மாத விலக்கு
தொன்னூ றுநாட்கள் தள்ளிப் போச்சு,
என்ன செய்வேன்! இரண்டு குழந்தைகள்
எனக்கு உண்டு முன்பே, இன்னமும்
வேண்டாம்; கர்ப்பம் கலைக்க வேண்டும்;
உபாயம் கடிதில் எனக்குச் சொல்லென
செவிலியை ஒருபெண் கேட்டாள்; அதற்குநான்
சொன்னேன்: புருசனி டம்படுத் தெழுந்தால்
பெற்றுக் கொள்ளச் சொல்லு, வாசக்டமி
புருசனை யும்செய் யச்சொல், கள்ளக்
காதலன் காரணம் என்றால் அவனைக்
கட்டச் சொல்லு தாலி! கருக்க
லைப்பு செய்து உயிரைக் கொலையும்
செய்வது கொடிய பாவம்
என்பதை நீஅறி பெண்ணென் றேனே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-14, 8:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 146

மேலே