பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்.. (13). -->13
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்
வாழ்கிறோமா என்பதனை மறந்து(14) -->27
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையும் சமூகத்தையும் சிடுசிடுத்து....
மனங்களை நோகடித்து.. நேயம் தொலைத்து
சுயநலவாதிகளாய் சுற்றியலைந்தபடி.. ..(13) -->40
எதற்கோ இந்த அவசரமும் படபடப்பும்
யாரும் விரட்டாமலேயே இத்தனை ஓட்டங்கள்
பரபரப்பில் அறிவதில்லை நோய்கள் காதலிப்பதை
நோய் நம்மை தினம் விழுங்கியபடி ...(16) -->56
ஜனன நாளினை பிறப்பில் அறிந்திருக்கிறோம்
மரணத்தை எவரேனும் அறிந்து சொன்னதுண்டா??
காத்திருக்கிறது கவருதற்கு விதவித வடிவினில்
இன்றோ.. நாளையோ...சொல்வதற்கில்லை(15) -->71
இணக்கமான வார்த்தைகள் கற்றறிந்தோமா
கற்றறிந்தாலும் பேச்சினில் கொண்டோமா??
வினாக்களை எழுப்புங்கள் இன்றாவது
தெளிவிருந்தால் விடை தெரியும் நம்முள்ளே...(13) -->84
நன்றியும் மன்னிப்பும் நாவினில் இருக்கட்டும்
மனித நேயம் மனதில் நிலைக்கட்டும்
புன்னகை பூக்களோடு இன்றே புறப்படுங்கள்
கைகுலுக்குங்கள் உறவுகளோடு.. வாழ்க்கை சுகந்தமாய்...(16). -->100