மலரும் மங்கையும்

மலரும் மங்கையும்
--------------------------------

பூக்களெல்லாம் அழகுதான்

ஆயினும் பூக்களெல்லாம் மணப்பதில்லை

கனகாம்பரம் அழகுதான்

வாடா மல்லியும் அழகுதான்

அவற்றில் மணம் இல்லை என் ?

படைதவந்தான் இதற்கு

பதில் தரமுடியும்

என்று நான் நினைக்கையிலே

பேரழகு படைத்த பெண்கள்

சிலர் நினைவுக்கு வந்தனர்

சரித்திரம் சொல்லும்

பேரழகி கிளியோபாத்ர

நெஞ்சில் ஈரமற்றவள்

நல்ல நறுமணமும்

நேர்த்தியான உருவமும்

பெரிய ரோஜாவிலும்

சிறிய மல்லியிலும் காணலாம்

அழகிருந்தும் மனமில்லா பெண்கள்

மணமில்லா பூக்கள் போலே

இயற்கையின் நியதியும் இதுதான்

ஆண்டவன் தீர்ப்பும் இதுதான்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (14-Jul-14, 1:56 pm)
Tanglish : malarum mangaiyum
பார்வை : 163

மேலே