மனைவி
முதலில் இனித்தது !
இனித்து இனித்து
புளித்தது!
புளித்து புளித்து
கசத்தது !
கசத்து கசத்து
கடிந்தது !
கடிந்து கடிந்து
வலித்தது !
வலித்து வலித்து
பழகிப் போனது!
மதிப்பும் மரியாதையும்
தூரம் போனது !
வாழ்க்கையே சாபமானது
திருமணமோ தண்டனையானது!
* * *
நாற்பது வயதுக்கு மேல்
அறிவு வந்தது !
அறிவு கேட்ட ஜடம்
என்றாள்!
நன்றி என்றேன் !
எங்க சுத்திட்டு வார
என்றாள்!
சப்பிட்டியாம்மா
என்றேன் !
எல்லாம் என் தலைஎழுத்து
என்றாள்!
எனக்கு சரியான
துணைவி நீதான் என்றேன் !
புத்தி கெட்டு போச்சு
என்றாள் !
உன்னை காதலிக்கறேன் என்றேன்!
பதிலுக்கு பதில்
சொல்லவில்லை
மௌனம் காத்தேன் !
சிலகாலம் கழித்து
வாழ்க்கை இனித்தது !
இனித்து இனித்து
வாழ்க்கை சுகமானது !
பதிலுக்கு பதில்
பாசம் வந்தது !
கல்லெறிந்தால் கல்லும்
பூவீசினால் பூவும் !
மனைவி துனைவியாவதும்
தூரமாய் போவதும்
உன்கையில்!
உன்வார்த்தையில் !