இறைவனின்கற்பனயில் மலர்ந்த நம் வாழ்வு

எண்ணத்தில் மலர்ந்ததை
கவிதையாய் படைக்கின்றான்
உள்ளத்தில் ரசித்ததை
இசையாய் வடிக்கின்றான்
கண்களால் பருகியதை
சித்திரமாய் செதுக்குகின்றான்
கற்பனயில் உதித்ததை
ஓவியமாய் வரைகின்றான்
படைக்கப்பட்ட எல்லாமே
பிறர்ரசிக்க வேண்டுமெனஎண்ணுகிறான்
இறைவனின்கற்பனயில் மலர்ந்த
நம் வாழ்வும் பிறர் மகிழத்தானே!