உனக்காக நான்

மழைத் துளியைக்
கேட்டுப் பார் என்
சோகத்தைக் கூறும்
பனித் துளியைக்
கேட்டுப் பார் என்
அன்பைக் கூறும்
இடி மின்னலைக்
கேட்டுப் பார் என்
கலகலப்பைக் கூறும்
மௌனத்தைக் கேட்டுப்
பார் என் கற்பனையைக் கூறும்
மூச்சுக் காற்றைக் கேட்டுப் பார்
என் குணத்தைக் கூறும்
சமையலை சுவைத்துப் பார்
என் கைவண்ணத்தைக் கூறும்
குமுதம் புத்தகத்தைக் கேட்டுப் பார்
என் ரசனையைக் கூறும்
கவிதையைக் கேட்டுப் பார் என்
பொய்களைக் கூறும்
நண்பனைக் கேட்டுப்பார்
என் வெகுளித் தனம் புரியும்
என் இதயத்தைக் கேட்டுப் பார்
உன் பெயர் கூறும்
என் உள்ளத்தைக் கேட்டுப் பார்
உள்ளே இருப்பது நீ
எனக் கூறும் என்
உயிரான உயிரே.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Aug-14, 12:28 pm)
Tanglish : siru kavithai
பார்வை : 65

மேலே