நம் வாழ்நாள் வரை

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!

நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63

எழுதியவர் : கே இனியவன் (26-Aug-14, 1:03 pm)
பார்வை : 67

மேலே