ரொம்ப நன்றிங்க எசமான்
இரு தரப்பு வாதங்களையும் கேட்டு ஆராய்ந்ததில் முனியன்தான் கோயில் நகைகளைத் திருடினான் என்பதை சர்க்கார் தரப்பு நிரூபிக்க இயலாத காரணத்தால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப் பட்டவர்க்கு சாதகமாக்கி முனியனை நிரபராதி என்று கூறி இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. . .
அய்யோ. . . ரொம்ப நன்றிங்க எசமான். அப்படியே எடுத்த நகையை நானே வச்சுக்கலாமுன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க எசமான். உங்களுக்குப் புண்ணியமாப் போட்டும்.
*=*=* *=*=* *=*=*, *=*,