என் அன்னைக்கு தூது செல் எழுத்தே

உன்னை இன்றி
உலகில்
உறவென்று
எவரும் இல்லை
என்னை விட்டு
நீயும்
விண்ணுலகம்
சென்றதென்ன
வேதனையின்
விளிம்பில் இன்று
போகுதம்மா
என் உயிரும்
வேண்டி
அழைக்கின்றேன்
வேறு எதுவும்
வேண்டாம் தாயே
உன் மடி கொடு
நான் தலை
சாய... ......

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 10:22 pm)
பார்வை : 204

மேலே