துயிலும் அழகு

பஞ்சுமெத்தை மீதினில் பள்ளிகொண்ட தேவதையின்
பிஞ்சுமுகம் கள்ளமிலாப் பேரெழிலே ! -கொஞ்சிட
உள்ளந் தவித்திடும் உற்சாகந் துள்ளிவரும்
அள்ளிடத் தோன்றும் அழகு !

கண்மையால் பொட்டொன்றைக் கன்னத்தில் வைத்திடுவேன்
கண்ணே றுபடாமல் காத்திடுவேன் - பெண்ணழகே
நித்திரையில் சொர்க்கமோ? நிம்மதியாய்க் கண்துயில்வாய்
சித்திரமே சிங்காரச் சிட்டு !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Oct-14, 10:40 pm)
பார்வை : 366

மேலே