அறியாமல்

தேடிச் செல்கிறேன்
விடியலை-என்
கண்கள் குருடானது
அறியாமல்

பேசிக் கொள்கிறேன்
பைந்தமிழை -என்
வாய் ஊமையானது
அறியாமல்

கட்டிக் கொள்கிறேன்
உன்னை -நீ
என்னை விட்டுப் பொனது
அறியாமல்

அழுது கொள்கிறேன்
கண்களால்-கண்களின்
நீர் வற்றியதனை
அறியாமல்

எழுதியவர் : கீத்து (18-Nov-14, 10:23 am)
சேர்த்தது : லஜி லஜிதா
Tanglish : ariyaamal
பார்வை : 104

மேலே