மலரின் மனம்

கல்லறைக்கும்
கடவுள் சிலைக்கும் ,

கழுத்திற்கும்
கருங்கூந்தலுக்கும் ,

திருமணத்திற்கும்
தேர்வலத்திற்கும்,

கட்சிகாரனுக்கும்
கட்டையில் போரவருக்கும்..

மணம்வீசும் என்னை பறித்து
விலைபேசி பணம் கேட்டு

பச்சிளம் பாலகரின்
பாதியேனும் பசிபோக்கும்
ஏழைத்தாயின் ஏக்கத்துக்காய்
இறப்பு வேண்டி பிறக்கின்றோம்
மணம்வீசி மகிழ்விக்க அல்ல
பசிபோக்கி மரணிக்க....!

எழுதியவர் : கயல்விழி (12-Dec-14, 5:37 pm)
பார்வை : 195

மேலே