பிம்பம்

மனதில் நின்ற
மங்கை அவளை
மனங்குளிர பார்த்து ரசித்தேன்
ஆனால்
அவளோ உன்னை ரசித்து
சிரிக்கின்றாள் .

அவளுக்காய் நான்
காத்திருக்க
அவளோ உன்முன்
அன்னநடை பயில்கின்றாள்

அடங்காத ஆசையோடு
அள்ளியணைக்க நான் இருந்தும்
உனக்குள் இருக்கும் அவளை தான்
ஆசைகொண்டு பார்க்கின்றாள் .

அன்றாடம் ஆதங்கம் தான் மனதிற்குள்
ஆனாலும் ரசிக்கின்றேன்
உடைந்து போகும் உன்னையல்ல
உனக்குள் இருக்கும் அவள் பிம்பத்தை .!!

எழுதியவர் : கயல்விழி (30-Dec-14, 2:41 pm)
Tanglish : pimbam
பார்வை : 903

மேலே