புத்தாண்டே வருக புத்துணர்வை தருக

எண்ணமும் எழுத்தும் நேராக
எவரது மனமும் கோணாது
வண்ணமாய் வா புத்தாண்டே !

முன்னமும் பின்னமும் முரணாகாது
முதிர்க்கன்னி எவரது இல்லத்திலும் தங்காது
வாழ்க்கையில் மகிழ்ச்சி தங்கிடவே வா புத்தாண்டே !

செல்லமாய் கொஞ்சும் தாய்மைக்கு
குறைவிலா குழந்தை செல்வம் தந்திடவே
கண்ணீர் இருளில் மூழ்காமல்
காத்திடவே வா புத்தாண்டே !

பாரத மாதாவை புறம் தள்ளாது
புதுமை பெண்கள் பிறந்திடவே
பிரிவினை தவிர்த்து ஒன்றிணைக்க
பரிவுடன் வா புத்தாண்டே !

அன்னையர் கண்ணீர் சிந்த
அயல்நாடு செல்லும் பிள்ளைகள்
தேவைகள் இங்கே கிடைக்க
தேவதையாய் வா புத்தாண்டே !

சின்னதாய் விழும் விரிசல்
சிக்கிரம் சரியாகி இருமனம் சிரிக்க
திருமண பந்தத்தில் சீதனம் வேண்டாது
சீதையாய் வா புத்தாண்டே !

எழுதியவர் : கனகரத்தினம் (31-Dec-14, 9:07 pm)
பார்வை : 2092

மேலே