பிசகுகள்

உனது கோபம்..
தண்டிப்பதற்கு
பயன் படுவதை விட
திருத்துவதாக இருக்கட்டுமே!

உனது கண்ணீர் ..
தோல்வியை எண்ணி
விசனத்தை வளர்ப்பதற்கு வேண்டாம்..
சேமித்து வை அதை..
வெற்றி பெற்ற பின்
ஆனந்தத்தில் மகிழும்
தருணத்திற்காக !

நாளை ..
இப்படி ஆகி விட்டால்..?
என்று இப்பொழுதைய பொழுதை
பயந்தே இழக்காதே..!
எப்படி ஆக வேண்டும்
என்று மட்டுமே
நினை.. !
..
ஏனென்றால்
உன் எண்ணம் நிறைவேற
நீ மட்டுமே
அதற்கு துணை!
..

கண்ணியத்தை கையில் ஏந்தி..
மனிதத்தை உள்வாங்கி..
முன்னேறி செல்..
வீழ்ச்சிகளை முன் சென்று..
வீழ்த்திடுவாய்..நீ!
..
இந்த முறையும் வெல்வேன்..
என்றே ஒவ்வொரு முறையும்..
எண்ணி முன்னேறு..
தோல்வி பற்றி..
மறந்தும் கூட..எண்ணாது !
..
பிசகுவது உலகம் அல்ல..
நினைவில் கொள்!

எழுதியவர் : கருணா (13-Jan-15, 9:02 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 141

மேலே