தேசியாக ……
இரமனாக இருந்தாலும்
இராவணனாக இருந்தாலும்
இச்சையோடு வருபவனுக்கு
இஷ்டமில்லா உடம்பை
இரவெல்லாம் கொடுப்பவள் நான்
பள்ளிக்குப் போகும் வயதில்
பள்ளிக்கொள்ள வரும்
பாலனாக இருந்தாலும்
பணம் கொடுப்பவனுக்கு
பக்குவமாய் நடப்பவள் நான்
முகங்கள் மாறினாலும்
மேகங்கள் பொழிந்தாலும்
மண்டிட்டு ஜெபித்தாலும்
மறக்காமல் வரம் கொடுக்கும்
மாசற்ற பெண்ணானேன் நான்
வயிற்றுப் பொழப்புக்காக
வந்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வலுக்கட்டாயமாக
வந்தேன் என்று காரணம் கூற விரும்பவில்லை
வழி தெரியாத உலகில்
வசனமின்றி வாழ்கிறேனே நான்
வரம் வாங்கி வந்தேனோ தேசியாக – மீண்டும்
வண்ணம் பூசிய முகத்தோடு தயாராகினேன்
இச்சையோடு வந்தவனுக்கு
இஷ்டமில்லா உடம்பை
இரவெல்லாம் கொடுப்பதற்கு ……………….!