என் கல்லூரியின் கடைசி நாள்
என் கல்லூரியின் கடைசி நாளை எட்டிவிட்டேன் என் கடமை எனும் கஷ்ட நாட்களில்
முதல் நாளில் அடி எடுத்து வைத்து விட்டேன்...
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி ஆதரவாய் பேசிக்கொண்டோம் "ஆனந்தமே" நம்மை
கண்டு ஆனந்தம் கொள்ளும் வகையில் மகிழ்ச்சியின் மறு பிறவியே சென்றடைந்தோம் ..
அறுசுவை உணவை பரிமாறவிட்டாலும் அளுகொரு சுவை உணவோடு அவர் அவரின் உணர்வுகளையும் பரிமாறிகொண்டோம்...
என் கவிதைகளுக்கு காரணமாய் அமைந்த தேர்வறை என்னை எப்பொழுதுமே வசியம் செய்து வைத்திருக்கும் வகுப்பறை .வீசி எறிந்த காதல் கடிதத்திலும் விரிசல் விழாமல் பாதுகாத்தது என விட்டு விட்டு நிகழந்த இந்த நிகழ்வுகள் எல்லாம் என் விழிகளில் தினமும் விடாமல் விதைத்து கொண்டிருக்கிறது..............
நாங்கள் ஒரு முறை கூட தேர்வில் தோற்றது இல்லை ..ஆனால் தேர்வுகள் பல முறை எங்களிடத்தில்
தோற்றுவிடும் மறு தேர்வினை மகிழ்ச்சியாக எழுதுவதலோ என்னவோ "தோல் கொடுப்பான் தோழன் " என்ற தொனமையான பழமொழிக்கு தொண்டாகி அந்த தேர்வுகளும் எங்களுடன் தோழமை கொண்டது ..
நனைந்தது கல்லூரி ஊரிபோனது அனைவரின் உள்ளமும் இறைவா ! இன்றே இறந்து போக இஷ்டம் தான் எனக்கு இருந்தும் இறக்காமல் செல்கிறேன் ஏநேனனில் என்றுமே என்னை மறக்காத என்
நண்பர்கள் என் அருகிலேயே நடப்பதால் ...........