கல்லூரி மாணவர்கள்
நீளமான தோகை கொண்ட
ஒரு அழகான ஆண்மயில் பறந்து வந்து
ஒரு வீட்டின் கூரையில் அமர்கிறது.
பார்க்கிறார்கள்
தார்ச் சாலையில் 'கிரிக்கெட்' விளையாடிக் கொண்டிருந்த
கல்லூரி மாணவர்கள்.
சிவா : மச்சி...!
முருகன் : என்ன மாமு... ?
சிவா : கூரையில இருக்கிற மயிலை விட பறந்த மயில் தான் மச்சி அழகு
முருகன் : மாமு எப்படிச் சொல்லற ?
சிவா : மயில் பறக்கும் போது நீயும் உன்னோட ரெண்டு பொண்டாட்டியும் தான் அது மேல இல்லையே. அதான் அழகு...
முருகன் : மேகத்தைப் பார்த்த மயில் தோகை விரிச்சு ஆடுன ஆட்டத்துல நாங்க கீழே விழுந்துட்டோம். நான் இங்கே இருந்து அந்த ரெண்டு பொண்டாட்டிகளையும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்
சிவா ; கிடைச்சா மட்டும் குழந்தை பிறந்துடுமா...?
முருகன் : என்ன மாமு சொல்லற...!
சிவா : இன்னிக்கு வரைக்கும் குழந்தை இல்லையாம். நீங்க மூன்று பேரும் மலடுகள்னு பேசிக்கிறாங்கப்பா
முருகன் : மாமு... கவுத்துப் புட்டியே...!!! ங்ஞே...!!!!