கல்லூரி மாணவர்கள்

நீளமான தோகை கொண்ட
ஒரு அழகான ஆண்மயில் பறந்து வந்து
ஒரு வீட்டின் கூரையில் அமர்கிறது.
பார்க்கிறார்கள்
தார்ச் சாலையில் 'கிரிக்கெட்' விளையாடிக் கொண்டிருந்த
கல்லூரி மாணவர்கள்.

சிவா : மச்சி...!

முருகன் : என்ன மாமு... ?

சிவா : கூரையில இருக்கிற மயிலை விட பறந்த மயில் தான் மச்சி அழகு

முருகன் : மாமு எப்படிச் சொல்லற ?

சிவா : மயில் பறக்கும் போது நீயும் உன்னோட ரெண்டு பொண்டாட்டியும் தான் அது மேல இல்லையே. அதான் அழகு...

முருகன் : மேகத்தைப் பார்த்த மயில் தோகை விரிச்சு ஆடுன ஆட்டத்துல நாங்க கீழே விழுந்துட்டோம். நான் இங்கே இருந்து அந்த ரெண்டு பொண்டாட்டிகளையும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்

சிவா ; கிடைச்சா மட்டும் குழந்தை பிறந்துடுமா...?

முருகன் : என்ன மாமு சொல்லற...!

சிவா : இன்னிக்கு வரைக்கும் குழந்தை இல்லையாம். நீங்க மூன்று பேரும் மலடுகள்னு பேசிக்கிறாங்கப்பா

முருகன் : மாமு... கவுத்துப் புட்டியே...!!! ங்ஞே...!!!!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Apr-15, 8:59 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 452

சிறந்த நகைச்சுவைகள்

மேலே