என்னுள் ஓர் உணர்வு
இது வரையில்
எழுதியவையெல்லாம் உனக்கு
ஏற்புடையதாக இல்லை...
கனவுகள் என்பதன்
மெய்ப்பொருள்
கற்பனையின் உச்சம்...
வேதியியல் மாற்றங்கள்
என் மனதின்
வேஷங்கள் மாற்றியது...
நிலவாக நீ இருக்க
நிலவொளியோ என் மீது
நிஜமாகப் படரவில்லை ...
இருளிலேயே
நான் தினமும்
மூழ்கிக் கிடப்பதால்...
கனவுப்பாதையில்
கற்பனை எனும் நீர் தெளித்து கண்ணீர்ப் பூக்கள் வளர்த்தேன்...
நீ வீசிச்செல்லும் பார்வையில்
வீழ்ந்தவன் இப்போது
வீறுகொண்டு எழுந்தேன்
எனக்கூறுவது
வேடிக்கையாக உள்ளது...
நேரில் பார்த்து
நிறைய கேள்விகள் கேட்க
நினைக்கின்றது
என் நெஞ்சம்...
உன்னை
நேரில் பார்த்தாலும்
நிலைகுலைந்து போவேன்
என்னும் அச்சம்
நிறையவே இருக்கிறது...
நொருங்கிப்போன இதயம்
உனது நினைவுகளை
மறப்பதால் மட்டுமே
செயல்படும்...
போலியான
வாழ்க்கையினை
வாழ்வதுபோல்
என்னுள் ஓர் உணர்வு...