நச் வரிகள் கவிஞர் இரா இரவி

நச் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !

மெய்யா ? பொய்யா ?
அலகால் கொத்திப் பார்க்கும்
குருவி !

இதற்கு முன் கண்டதில்லை
இப்படி வியப்பில்
குருவி !

கூடு பறிபோன சோகம்
கூவி உரைக்கின்றதோ ?
குருவி !

நிழலை நிஜமென்று நம்பி
ஏமாந்த
குருவி !

பொன்னழகை கண்ணாடியில்
ரசிக்கும் அழகே அழகு
குருவி !

ஆறு வித்தியாசம் தேடி
ஒன்றும் கிட்டவில்லை
குருவி !

அலைபேசி கோபுரங்கள்
அகற்றிட அறைகூவுகின்றதோ?
குருவி !

கண்ணாடி முன்னாடி நின்று
கட்டழகை ரசிக்கின்றதோ ?
குருவி !

உன் ஜோடிக் குருவி இதுவல்ல
உணர் உன் நிழல்
குருவி !

வாகனத்தின் கண்ணாடியில்
வனப்பை ரசிக்கும்
குருவி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி! (6-Jul-15, 4:46 pm)
பார்வை : 247

மேலே