எதையும் ஈடுபாட்டுடன் செய்தல் வேண்டும்

எதையும் ஈடுபாட்டுடன் செய்தல் வேண்டும்
...........................................

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த
வீரனுக்கும் தகராறு வந்து விட்டது..

அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்..

எனவே டீ கடைக்காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..அவனது கதை முழுதும் கேட்ட அவர்,

சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன
என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன்.

இப்போது நீ என்ன செய்கிறாய்? என்று பின்பு கேட்டார்.

டீ ஆற்றுகிறேன் என்றான் அவன்..

அதையே தொடர்ந்து செய் என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்..

இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று
என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது..

அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது..

டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம்,

நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்..

போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு என்றார் துறவி...மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.."வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடைக் காரன்.

சரி என்று அமர்ந்தான் வீரன்...

டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்..
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்.

இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும்
விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,

போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என
எண்ணுகிறான்..போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை..
.............................................................................................

எனினும் சில வரிகள்..

ஆம் நண்பர்களே.,

நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது
அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்..

எதையும் ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும் அதை முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம்

எப்பொழுதும் உங்கள் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

மனதில் ஊக்கமும், உத்வேகமும் நிறைந்து இருக்கும் போது செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.

பிறகு என்ன,

வெற்றி எப்போதும் உங்களுக்குத்தான்.

எழுதியவர் : படித்ததில் சுவைத்தது (20-Aug-15, 3:50 pm)
பார்வை : 497

மேலே