பிரபஞ்சமும் நாமும் --கயல்விழி

வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்
எதுவும் செய்யாத மனிதன் மற்றும்
பிதற்றிக்கொண்டு இருந்தான்
பிரபஞ்சத்தின் முடிவு இதென்று ..!!!

எழுதியவர் : கயல்விழி (6-Sep-15, 3:22 pm)
பார்வை : 300

மேலே