அதிகாலை அழகு - மெல்லிசைப் பாடல்

மெல்லிய காற்று என் மனம் தீண்டுதே-மனம்
இயற்கையின் நினைவில் மிதக்கிறதே...
இயற்கை வரைந்த கவிதை-அதை
ரசித்திட என் மனம் நினைக்கிறதே....

பொன்னிறக்கடலில் செந்நிறக் கதிரவன்
குளித்தெழும் நேரம் காலை
பறவைகள் கூடி பண்னிசை பாடி
மகிழ்ந்திடும் நேரம் காலை
பனியில் குளித்த மலரை வண்டு
பாட்டில் வடிக்கும் காலை அதிகாலை.. (மெல்லிய...)

தென்றல் வந்து வீசும் –அதில்
மலரின் சுகந்தம் பரவும்
பூக் காம்பு மெத்தையாகும் – அதில்
பூக்கள் விழித்துப் பார்க்கும்
அதி காலை என்றும் அழகு-அதில்
அகில உலகும் மயங்கும்.. (மெல்லிய காற்று..)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (6-Sep-15, 6:04 pm)
சேர்த்தது : இராசேந்திரன்
Tanglish : athikalai alagu
பார்வை : 339

மேலே