போங்கம்மா
அம்மா. : தரையைப் பெருக்கறமாதிரி...எதுக்கு தழையத் தழைய பொடவக் கட்டனும்....அப்புறம் எதுக்கு தடுக்கித் தடுக்கி விழனும்....?
ராஜாமகள் : போங்கம்மா...!
அம்மா : தட்டைப் பாத்து சாப்பிடேன்....எப்பப் பாத்தாலும் புக்தானா...?
ராஜாமகள் : போங்கம்மா...!
அம்மா : மெதுவா சிரி...அதென்ன சும்மா பல்ல பல்ல காட்டிக்கிட்டு....
ராஜாமகள் : போங்கம்மா.....!
இரண்டு வருடமாக கேட்கிறேனே....
கனவிலாவது வாங்கம்மா.......!