வெளிநாட்டு வாழ்க்கை

கனவுக்கும் காத்திருக்கிறேன்
கனவிலேனும் உன் முகம் கண்டுறங்க கண்ணுறங்க...
காலமும் நகர நகர கனவுகளும் நீளுகின்றன
கடிதங்கள் களைத்து எழுத்துக்கள் மனனமாகிவிட்டன
கரம் பிடித்த காலங்கள் கடந்து கனவாகிப்போகின..
மீண்டுமொரு விடுமுறை வேண்டுமென
இப்டியொரு வாழ்வு இனியும் வேண்டாமென
என்றெண்ணி எண்ணி கிடந்த காலங்கள் வரமாகின...
வாசல்படி பார்த்து பார்த்து அவள் கண்களும் பூத்தாச்சு
இவன் இங்கு நாள் எண்ணி எண்ணி எண்ணில் இருமடங்காச்சு
எழுபதை தொட்டாச்சு
இனியும் வேண்டாம் வாழ்வோம் ஒன்றாக என்ற காலம் கடந்தாச்சு..
மனைவி மடி மீது தலை வைத்துரங்க தவழ்கிறான் காலச்சக்கர சுழற்சி இறுதியில்
உறங்கியவன் எழவில்லை காலம் இடம் கொடுக்கவில்லை..
உழைத்தது கூட வரவில்லை உறங்கிய மடியில் நீடிக்க உறங்கியதில்லை

எழுதியவர் : பர்ஷான் (14-Sep-15, 2:44 pm)
பார்வை : 214

மேலே