கர்ப்பம்

கீறப்பட்ட மேனி
விதைகள் உள் வாங்கவே
தீண்டப்பட்ட மேனி
மரமாய் வேர் பிடிக்கவே

தோண்டப் பட்ட இடங்கள்
கிணற்று நீருக்காகவே
என அனைத்தையும்
பொறுத்துக் கொண்டவள்

அளவுக்கு மீறிவிட்டிருக்கும்
அஸ்திவாரக் காயங்களால்
தாக்குண்டு அடிக்கடி
நடுங்கிச் சாகிறாள்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் -#‎அஸ்வின (3-Oct-15, 9:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 249

மேலே