ரத்ன மாலிகா

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.
இவர் அருளிய. " பிரஸ்னோத்ர
ரத்ன மாலிகா " என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.,..

/ எது இதமானது?
* தர்மம்.

/ நஞ்சு எது?
* பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

/ மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?
* பற்றுதல்.

/ கள்வர்கள் யார்?
* புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

/ எதிரி யார்?
* சோம்பல்.

/ எல்லோரும் பயப்படுவது எதற்கு?
* இறப்புக்கு.

/ குருடனை விட குருடன் யார்?
* ஆசைகள் உள்ளவன்.

/ சூரன் யார்?
* கெட்ட வழியில் மனம் செல்லாமல்,
அதை அடக்குபவன்.

/ மதிப்புக்கு மூலம் எது ?
* எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

/ எது துக்கம்?
* மன நிறைவு இல்லாமல் இருப்பது.

/ உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?
* குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

/ தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?
* இளமை,
செல்வம்,
ஆயுள் ஆகியன.

/ சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
* நல்லவர்கள்.

/ எது சுகமானது?
* அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

/ எது இன்பம் தரும்?
* நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

/ எது மரணத்துக்கு இணையானது?
* அசட்டுத்தனம்.

/ விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம்?
* காலமறிந்து
செய்யும் உதவி.

/ இறக்கும் வரை உறுத்துவது எது?
* ரகசியமாகச் செய்த பாவம்.

/ எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
* துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள்.
நன்றி கெட்டவர்கள் ஆகியோர்!

/ சாது என்பவர் யார்?
* ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

/ உலகத்தை யாரால் வெல்ல முடியும்?
* சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

/ யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
* எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

/ செவிடன் யார்?
* நல்லதைக் கேட்காதவன்.

/ ஊமை யார்?
* சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

/ நண்பன் யார்?
* பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

/ யாரை விபத்துகள் அணுகாது?
* மூத்தோர் சொல்
கேட்டு நடப்பவனையும், அடக்க முள்ளவனையும்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Nov-15, 12:57 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 142

மேலே