முதல் குடி மகன் பிறந்த நாள்

முதல் 'குடி' மகன் பிறந்த நாள்
==============================
என்னடா அங்க அந்த டாஸ்மாக் கடை முன்னாடி ஒரே கூட்டம் .இளங்'குடி'மக்கள் எல்லாம் குடிச்சிட்டு கூச்சல் போட்டுட்டு இருக்காங்க?
டேய் அந்த டாஸ்மாக் கடையின் திறப்பு விழாவின் போது முதல் முதலா ஒரு முழு பாட்டில் சரக்கு வாங்கி விற்பனையைத் துவக்கி வைத்த ஆளுப்பேரு மூக்குப் பொடி சடகோபனாம். அவர அண்ணன் எஸ்கே-ன்னு தான் சொல்லுவாங்க. . அவரு நேத்து 9999 ஆவது தடவையா மது அருந்தினாராம் அந்தக் கடையிலே. இன்னிக்கு அவரோட பொறந்த நாளாம். அந்த பழம்பெரு குடிகாரர் இன்னிக்கு அங்க சரக்கு குடிக்கிறது 10,000 ஆவது தடவையாம். அதத் தான் அவரோட ரசிகர்களும் இளங்குடி டாஸ்மாக்கன்களும் குடிச்சுக் கும்மாளம் அடிச்சுக் கொண்டாடிட்டு இருக்காங்க. இரு இரு அவுங்க ஏதோ கூச்சல் போடறாங்க. அதக் கேப்போம்.:
”அண்ணன் நம்ம ஏரியாவின் குடி மன்னன், மூத்த ‘குடி’மகன், முதல் ‘குடி’மகன் டாஸ்மாக் சக்கரவர்த்தி மூக்குப் பொடி அண்ணன் எஸ்கே வாழ்க, வாழ்க.குடிச் சக்கரவர்த்தி அண்ணன் டாஸ்மாக்கர் மூக்குப் பொடி எஸ்கே வாழ்க”
அப்பா சாமி இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நாமலும் அண்ணன் மூக்குப் பொடி டாஸ்மாக் சக்கரவர்த்தி எஸ்கே வின் ரசிகராகிடுவோம். வாடா போலாம்.