என் தந்தை
பத்துத் திங்கள் பத்திரமாய்,
தன் கருவில் சுமந்தாள் அன்னை!
அன்னையுடன் என்னையும் சேர்த்து
பார்த்துக்கொண்டவன் தந்தை!!
என்னை கருவினில் சுமக்க
முடியாமல் போனதால்,
தன் நெஞ்சினில் சுமக்க
உறுதி கொண்டான் எந்நாளும்!
தன் செலவு குறைத்து,
எனக்கென நாளும் உழைத்து,
நான் கேட்காமலே
செய்வான் எதையும்!
நான் வேண்டும் போதெல்லாம் ,
வட்டி வாங்காமல் காசு தரும்
என் உலக வங்கி அவன்!!
இயல்பான என்திறமை கண்டு,
மனதினில் பெருமிதம் கொண்டு,
பிறரிடம் மிகைப்படுத்தி பேசுதல்
அவன் சிறப்பு!!
கொஞ்சம் கொவபம் கொண்ட ஆண்மகன்,
என்முகம் வாடினால் தோற்பவன்.
குறைவாய் பேசும் குணத்தவன்!
தன் நெஞ்சினில் பாசம் ஒளிதவன்!!
தான் கானா சுகம் யாவும்
நான் கண்டு மகிழ்ந்திடவே..
வெளியில் சொல்லா வேதனைகள்
அவன் நெஞ்சத்திலே புதைந்திருக்கும்!
மனைவி மக்கள் நலம் வேண்டி
தன் உடல் நலம் தொலைத்த;
எங்கள் வாழ்கை கதையில்,
என்றுமே அவன் கதாநாயகன்....
என் தந்தை!!!