நம்பிக்கை
குடும்பம் என்னும் வண்டியின் அச்சாணி
வாழ்க்கை என்னும் மரத்தின் வேர்
முயற்சி என்னும் ஆழியின் அலை
மனிதன் என்னும் உடலின் மூச்சு
வெற்றி என்னும் தீயின் விறகு
நாளை என்னும் சூரியனின் வெளிச்சம்
இதுவே நம்பிக்கை
ராமன் மீது சீதையும்
கிருஷ்ணன் மீது திரௌபதியும்
கோவலன் மீது கண்ணகியும்
ஹரிச்சந்திரன் மீது சந்திரமதியும்
கைகேயின் மீது தசரதனும்
கடவுளின் மீது மனிதனும்
மனிதன் மீது கடவுளும்
கொண்டது நம்பிக்கை