தை மகளே நீ வருவாயே - -- - சக்கரைவாசன்

" தை " மகளே நீ வருவாயே
********************************************************
மார்கழி பனி தெளிக்க மங்கையினம் கோலமிட
ஏர் கிழித்த செய்யின் ஊடே விளைந்தபயிர் இல்லம்புக
வேர்பிடித்த மஞ்சளுடன் தோகையுற்ற கரும்போடு
தார் வாழைக் குலையுடனே " தை " மகளே நீ வருவாயே !

குணமார்ந்த தமிழினத்தின் வாழ்வதுவும் நல் மணக்க
பானையிட்ட பச்சரிசி பாலோடு பொங்கியெழ
ஆனந்தம் கூத்தாட தந்தனத்தோம் இசைபாடி
தான தான்ய வகையோடு "தை" மகளே நீ வருவாயே !


( எழுத்துத் தோழமை அனைவருக்கும் எமது இதயம் கனிந்த "தை "ப் பொங்கல் வாழ்த்துக்கள்)

எழுதியவர் : சக்கரைவாசன் (14-Jan-16, 10:06 pm)
பார்வை : 86

மேலே