கவிப்புயல் இனியவன் கஸல் - 950

உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!

மூச்சு
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?

பூக்கும்
வரை காத்திருந்த
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Jan-16, 8:30 pm)
பார்வை : 215

மேலே