கரைவது கற்பூரங்களே

கரைவது கற்பூரங்களே !
கோவில்களின்
கர்ப்பகிருகங்களில்..
கரைவது கற்பூரங்களே!
கடவுளிடம் கரைந்து
வேண்டுவதெல்லாம்
தேவைகள் மட்டுமே !
மனது கரைந்திருந்தால்
மகான்கள் எண்ணிக்கை
கூடியிருக்க வேண்டாமா ?
மனிதர்கள் கரையவே
வேண்டாம் !
கற்பூரம் விற்பவர்களாவது
பிழைக்கட்டுமே! என
கண்டுகொள்ளாமலிருக்கிறாரோ ?
கடவுள் !
--- கே. அசோகன்.