விசித்திர உலகம் - பகுதி 3

வீரம் - காளை கட்டுதல்
*******************************

காதல் செறிந்த
காதல் உலகைக்
கண்டீர்
வீரம் விளைந்த மண்ணின்
வீரம் காண வாரீர்
வீர விளையாட்டைக்
காண வாரீர்
விந்தைகள் பலவுண்டு
விரைந்து வாரீர்

கட்டுக்கடங்கா காளைகள்
காணீர்
காண கண்கள் அஞ்சும்
கேளீர்
திமிரான காளைகளின்
திமிலைப் பாரீர்
திகைத்து நிற்பீர்

காளை கட்டுதல்
விளையாட்டின் பெயராம்
ஜல்லிக்கட்டு போலே தோன்றும்
வித்தியாசங்கள்,
விவரங்கள்
அறிவீர்

வளர்த்த காளைகளல்ல இவைகள்
வளர்ந்த காளைகள் தானே
வளர்ந்த காளைகள்.
வன்மையைத் தன்மையாய்
வடித்தவை
வேகத்தில் துடியாய்
துடிப்பவை.

காளையைக் கண்டு
கலக்கம் காணாதீர்
வீரர்கள் காண இப்பக்கம்
விரைவீர்
வீரத்துடன் அவர்தம்
விகேவத்தைப் பாரீர்
கண்களின் உள்ள கருணை
காணீர்

காளையைக் கட்ட
சிங்கங்களைப் பாரீர்
ஆண் சிங்கங்கள்,
பெண் சிங்கங்கள்
எல்லா சிங்கங்களைக்
காணீர்

வீரம் ஆணென்று பெணென்று
பேரம் காணாது
வைரம் பாய்ந்த நெஞ்சும்
வைராக்கியம் போதும்
விளையாட்டின் விதிகளைக்
கேளீர்

காதல் கொள்ளார்
களத்தில் செல்லார்
காலணிகள் அனுமதியார்
காளை ஒன்று வீரர் ஒன்று

காளையின் திமிலுடன் ஓட்டம்
கருணையால் காதல் மனத்தால்
காளையிடம் வரும் மாற்றம்
காளையும் அடங்கும் அவர் வசம்

காளையின் மேல்
கருணை குறைய குறைய
காற்றில் மிதப்பர்
காளையிடம் எளிதில் தோற்பர்

வென்றோருக்கு
காளையுடன் பல பரிசு
மேலும் நல்ல உபசரிப்பு

துணிவும் கருணையும் வலிமையும்
ஒரு சேர விளையாட்டு
எங்கள் விளையாட்டு

காதல் கொண்டோர் எல்லோரும்
காளையும் கொள்வர்
காதலையும் வெல்வர்

- செல்வா

(தொடரும்.....)

எழுதியவர் : செல்வா (18-Feb-16, 11:29 pm)
பார்வை : 245

மேலே