மனஊஞ்சல்
கண்கள் கண்களுடன் உரசல்
மனதில் கேட்கும் பல கூச்சல்
எதை தேடினேன்
எதன்பின் ஓடினேன்
ஆசையிலாடுது இன்னும் மனஊஞ்சல்
ஆனந்தம் தந்த கண்களின் உருட்டல்
அதன் நினைவுகள் நெஞ்சில் மிரட்டல்
எண்ணங்கள் உருள
மனமும் மருள
உள்ளத்தில் உருவாகும் கனவுத்திரட்டல்
கையோடு கைகள் மெல்ல பரிசம்
உடலில் கண்ட சில கூச்சம்
மனம் ஒன்ற
நிலைகள் மாற
மதயானைக்கு வேண்டும் ஒரு அங்குசம்
- செல்வா
பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது