நீ

நான் காணாத இருளடைந்த உலகின்
அகல் விளக்காய் நீ
நான் கேட்காத சங்கீதத்தின்
ஸ்வரங்களாய் நீ
நான் பேசாத வார்த்தைகளின்
மொழிகளாய் நீ
நான் செல்லாத ஊர்களின்
பாதைகளாய் நீ
நான் தொடாத மலர்களின்
இதழ்களாய் நீ
நான் எழுதாத கவிதைகளின்
வார்த்தைகளாய் நீ
நான் உணராத ஸ்பரிசத்தின்
உயிராய் நீ
நான் வரையாத ஓவியத்தின்
கோடுகளாய் நீ
நான் வாழாத வாழ்க்கையின்
கருப்பொருளாய் நீ
நான் எண்ணாத எண்ணங்களின்
மேகமாய் நீ
நான் காணாத உலகின்
காற்றாய் நீ
நான் செய்யாத தவத்தின்
பலன்களாய் நீ
நான் படிக்காத கீதையின்
பக்கங்களாய் நீ
நான் கேட்காத பாடலின்
சங்கீதமாய் நீ
நான் போகாத கடற்கரையின்
பாதச்சுவடுகளாய் நீ
நான் எண்ணாத எண்ணங்களின்
கருத்தாய் நீ

எழுதியவர் : ப.மதியழகன் (21-Jun-11, 12:12 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
Tanglish : nee
பார்வை : 259

மேலே