மதுவின் மயக்கம்

அப்பா அப்பா என்ற
அழுகை குறள் ஒலிக்க
மயங்கி கிடந்தான் தந்தை
போதையில் சூழ்ச்சியோ

காய்ந்த வயிறு அண்ணத்துக்கு
வழி இல்லை இருந்தும்
போதையில் மயக்கம்

பசியிலே வாடும் பிஞ்சு
குழந்தைகள் தேனீர்க்கு கூட
வழி இல்லை இருந்தும் மயக்கம்
போதையில் தந்தை

புத்தி கொண்டவன்
செய்யும் வேலையா இது

வீட்டில் கஞ்சிக்கு வைத்த
உலையில் கொதிக்கிதம்மா
தண்ணி கூடவே என் வயிறும்


அரிசி வாங்க போன கணவன்
போதையில மயங்குனது
எதிர் வீட்டு பிச்சு பூ
சொன்னத கேட்டு

வயித்துல அடிச்சுகிட்டு
கதிரி அழுகிரா
வாழ்க்க வீனா போச்சேனு
வயித்து புல்லகாரி
கவிஞன் பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (13-Jul-16, 11:32 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : madhuvin mayakkam
பார்வை : 114

மேலே