கவிதை 123 வாழ்ந்திடும் இப்பிறவி நாமறிவோம்

பிரச்சனை என்பது நெருப்பாகும்
கவலை என்பது நெய்யாகும்
இரண்டையும் சேர்த்தால் அழிவாகும்
உள்ளத்தில் அமைதி எரிந்துவிடும்

வாழ்க்கை தந்திடும் அனுபவமே
பிரச்சனை வந்திடும் வாழ்பவர்க்கே
அனுபவம் காட்டிடும் வழிமுறையை
கவலை தடுத்திடும் அம்முறையை

குழப்பத்தில் தெளிவு வருவதில்லை
கலக்கத்தில் வழிமுறை தெரிவதில்லை
பிரச்சனை எதுவென புரிந்துகொண்டால்
கவலை கொள்ளத் தேவையில்லை

இனியெத்தனை பிறவி நாமறியோம்
வாழ்ந்திடும் இப்பிறவி நாமறிவோம்
கவலையை எடுத்து எறிந்திடுவோம்
பிரச்சினை வந்தால் தீர்த்திடுவோம்

தீர்வு என்பது இருவழியாகும்
இதயத்தில் பிறப்பது உணர்ச்சிவழி
சிரத்தில் பிறப்பது சிந்தனைவழி
இரண்டையும் உணர்ந்தால் நல்லவழி

வாழ்க்கை என்பது வாழ்பவர்க்கே
நம்பிக்கை என்பது இறையருளே
வாழ்ந்திடும் காலம் எத்தனையோ
மகிழ்ந்து களிப்போம் இக்கணமுதலே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Sep-16, 10:21 am)
பார்வை : 56

மேலே