​மண்வாசம்

மறவாத வாசமது மண்வாசம்
மனத்தைக் கிள்ளிடும் வாசம் !
எந்நாடு சென்றாலும் வாராது
எந்நேரம் நம்மண்ணின் சுவாசம் ​!

​செம்மண் வீதியில் விளையாடிய
நறுமணம் நிலைக்கும் நெஞ்சினில் !
காளைவண்டி சத்தமும் கேட்டிடும்
காளையர் குரல்களும் ஒலித்திடும் !
கன்னியர் கொலுசொலி இசையுடன்
கடைக்கண் பார்வைகளும் ஈர்த்திடும் !

வட்டரா மொழிப்பேச்சுக் கொட்டிடும்
குற்றால நீர்வீழ்ச்சியாய் குளிர்ந்திடும் !
ஊர்க்காரப் பாசமும் ஊற்றெடுக்கும்
உலகத்தில் எங்கிருப்பினும் தங்கிடும் !
தலைமுறை தழைத்தாலும் மறையாது
நம்வாழ்வில் தொடர்ந்திடும் மண்வாசம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Nov-16, 9:35 pm)
பார்வை : 96

மேலே