காதல்- நான் கண்ட சித்திரப் பாவை

அதோ என் வீட்டு பக்கத்தில்
அந்த வீட்டு வாசல் பக்கத்தில்
நான் கண்ட அந்த காட்சி
பேசும் சித்திரமோ என்றெண்ணி
அருகில் சென்று பார்த்தேன்
பேரெழில் பாவை அவள் என்றறிந்தேன்
அந்த ஓவியன் உள்ளத்தில் உணர்ந்து
கருத்தில் வைத்து கைவண்ணம் காட்ட
வந்தமைந்த சித்திரம் போல்
உயிரோவியமாய் என் கண் முன்ணே
பாவை அவள் நிற்கின்றாள்
முழு வண்ணத்தமிழ் பெண்ணாய்
என் கண் முன்ணே காட்சி தருகின்றாள்
அத்தனை கொள்ளை அழகு
அந்த உயிரோவியம் தாங்கி நிற்க
சற்றே அசந்து அவள் அருகே நான்

அசைந்து அசைந்து வந்தாள்
அசைந்தாடும் தென்றலாய்
வந்து என்னைத் தொட்டு
என்னைத் தெரியவில்லையா
சீனு என்று அவள் என் பெயரை
கிட்டே வந்து கூப்பிட்டபோது
அறிந்து கொண்டேன் அவள்
அவள்தான் நேற்றுவரை
பாவாடையில் தெருவெல்லாம் சுற்றிவந்த
அடுத்த வீட்டு மாமியின் பெண்
சுனிதா , சுனி என்று
நாங்கள் எல்லாம் செல்லமாய் அழைத்த
அந்த ரோசாப்பூ

இறைவா ஒரு பெண்ணின்
மலரும் பருவத்தில் நீ
இத்தனை எழில்களை தொக்கிவைக்க
அவள் பெண்ணாய் முழுதும்
மலர்ந்த போது
அந்த எழில்கள்
மின்னல் போல்
கண்களை சற்றே
பறிப்பதேனோ

கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்
சுனி உன்னை இப்போது
கண்டு கொண்டேன்
நான் தேடிவந்த
காதல் சித்திரம்
நீ தானா
சிறுமியாய் சிறு மத்தாப்பு
புன்னகை உதிர்த்து
திரிந்து வந்தவளா நீ
நம்ப முடியவில்லை
நம்ப முடியவில்லையே !


என்று மனதிற்குள்
சொல்லி கொண்டேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Dec-16, 11:45 am)
பார்வை : 118

மேலே