சுவாசமே - நீ வருவாய் என

அன்றொரு நாள்...
உன்னை தொடர்ந்தேன் பார்த்த முதல் நாளிலே...
என்னை மறந்து உன்னை சுவாசிக்கிறேன் அன்று முதல்...
சுவாசம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும் எனக்கு...
சுவாசமாக என்னை சுற்றி நீ இருந்தால்...

நீ ஒவ்வொரு நாளும் என்னை கடந்து செல்கிறாய்...
ஆனால் மின்னல் வீசும் கண்களின் பார்வையில்
ஒரு முறையாவது பட மாட்டேனா என ஏங்குகிறேன்...

தினமும் இமையருகே கனவுகளின் ஏக்கத்தோடு...
மனதில் முழுதும் உன் நினைவுகளோடு...
தனிமையிலும் சிரிக்கிறேன்...
உன் எழில் கொஞ்சும் முகத்தை நினைத்து...

என்றென்றும் காத்திருப்பேன்!!!
இந்த நிமிடத்திற்காக மட்டுமல்ல...
என்று என்னுடன் நீ வருவாய் என...

எழுதியவர் : காவ்யா (21-Dec-16, 9:19 pm)
பார்வை : 287

மேலே