சித்திரம் பேசுதடி

சிவப்பு வண்ண கடலில்
ஆதவன் குளிக்கும் போது
தாமரை அவளை சந்திதேன்

அவள் கண்களும் கவி பாடும்
குயிலோசை அவள் குரலென

மனம் வீசும் மல்லிகை அவள்
மயில்தோகை அவள் கூந்தலென

அவள் பார்வையால்
மேகம் கருக்கிறது பேசுகையில்
பூவாய் மழைத்துளி விழுகிறது

நாணம் பேசும் திங்கள் அவள்
நாய்க்குட்டி பாசம்
வெண்ணிலா அவள்

நாடகத்தில் இராணி அவள்
அரவணைப்பதில் தாய் அவள்
என் கனவு தேவதை அவள்

காதல் என்ற மாயம் மங்கை
வடிவில் மோசம் செய்து போனது

பாவையின் பெண்மை அவள்
சூழ்ச்சியில் தெரிந்தது

கனவு கலைந்து விட்டது
காதல் கலவியால் கலங்க பட்டது

அவளை போல் அழகிய கவிதையை
இதுவரை நான் வாசித்து இல்லை

அவள் நினைவுகள் தீ மூட்ட
என் கனவுகள் தினமும் எரிகிறது

காத்திருந்தால் அவள் வரபோவதில்லை ஆகையால்
கவிதையை காதலிக்க
தொடங்கி விட்டேன்

எழுதியவர் : ஆதவன் (26-Dec-16, 4:36 pm)
சேர்த்தது : ஆதவன்
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 238

மேலே