உன் பாா்வையில்

உன் பார்வை
தென்றலாய்
என்னை தீண்ட
தினறினேன்....

பாவையின அழகில்
நாணம் வியந்தேன்
கொலுசொலி கேட்டு
நிலவை ரசித்தேன்....

அவள் கூந்தல் என்னை
தொட மலரின் வாசமாய்
தடுமாறினேன்
கண்ணால் பேசும்
அவள் அழகில்
நான் காணாமல் போனேன்...

பெண்ணே உன்னால்
காதல் கடலில்  விழுந்தேன்
கரையேற்றி காப்பாற்ற
நீதான் வேண்டும்...

இல்லை என்றால்
உன் பேர் சொல்லி
மூழ்கிபோவேன்
நம் காதல் நினைவுகளோடு..

எழுதியவர் : சிவசக்தி (5-Feb-17, 8:02 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 440

மேலே