நிம்மதி தந்தது
ஒடுங்கிய முகம்
ஒடிந்து விழுவதுபோல தேகம்
கூட்டம் காணும் இடத்தில்
கருமமே கண்ணாய்
வயிற்று பிழைப்புக்கு—பலூன்
விற்கும் பெரியவர்
காசிக்கு வந்தால்
கருமம் தொலையுமென்பர்
இவரோ, பிள்ளை குட்டி வயிறு நிரம்ப
இரவின் கடுங்குளிரிலும்
இமைகள் மூடாம—பலூன்
விற்று வாழ்பவர்
வேற்று இடம்
வெவ்வேறு சனங்கள்
தேடும் இறையுணர்வு
எல்லோருக்கும் ஒன்றாவதுபோல்
பசியும், ஏக்கமும், பரிதவிப்பும்
பாசமும் அனைவருக்கும் ஒன்று தான்
விற்கும் பலூனை மொத்தமா
வாங்கியபோது
பெரியவர் அடைந்த மகிழ்ச்சி,
இறைவனின் தரிசனம்,
அபிஷேகம், ஆராதனையை விட
நெஞ்சுக்கு நிம்மதி தந்தது