பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு - சுப பந்துவராளி

1980 ல் வெளிவந்த ’சரணம் ஐயப்பா’ என்ற திரைப்படத்திற்காக திரு.தசரதன் என்ற பாடலாசிரியர் இயற்றி சந்திரபோஸ் இசையமைப்பில் சுப பந்துவராளி ராகத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடல் ’பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்’. திரு.தசரதன் திரைப்பட இயக்குனரும் கூட.

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ( ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )

அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )

பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
2 ( அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் )2
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் )
(ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-17, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 352

சிறந்த கட்டுரைகள்

மேலே