ஊர் சுற்றி புராணம்

பயணம் என்பது நம் வாழ்வில் அன்றாடம் கலந்த ஒன்று. பயணம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. பயணங்கள் மேற்க்கொள்ளும் போது நம் மனதில் பல எண்ணங்கள் அலைபாயும் அல்லது ஏதேனும் ஒரு மனிதரை சந்திக்க நேரிடும். அவ்வாறு ஏதேனும் ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அந்த பயணம் முடிவதற்க்குள் நண்பர்களாக மாறிய பல பேர் உண்டு. இரு சில பயணத்தின் போது ஏதேனும் ஒரு புத்தகத்தை கொண்டு செல்வார்கள். அந்த பயணம் முடியும் முன் அந்த புத்தகத்தையும் படித்து முடிப்பார்கள். இவ்வாறு பல பேர் தான் செல்லும் பயணத்தை ஒரு நல்ல பயணமாக மாற்றிக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் பயணம் செல்லும் போது அடித்து பிடித்துக்கொண்டு ஜன்னல் ஓரம் இருக்கையில் அமர்ந்து கொண்டு தூங்கிவிடுவார்கள் அவர் இறங்கும் இடம் வந்தால் தான் தூக்கத்தில் இருந்து எழுவார்கள். இவ்வாறு பயணத்தை ஒரு பயன் உள்ளதாக மாற்றுங்கள் இனி.

எழுதியவர் : விஷாலி (8-Dec-17, 12:22 pm)
சேர்த்தது : vishali
Tanglish : oor sutri puranam
பார்வை : 527

மேலே