தாயுமானவள்
![](https://eluthu.com/images/loading.gif)
எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாயே,
என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாயே,
முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாயே,
சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாயே ,
என்னை காக்கவே - தாயே
பூமிக்கு மீண்டும் வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
புண்ணியம் என்ன செய்தேனோ,
இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,
தேவதைக்கு தேவதையாக பிறந்தயே,
என் தாயுமானவளே.............