நகக்கறை

அகக்கண்ணில் புரைக்கொண்டு 
கடைக்கண்ணில் பணம் கண்டு 
நகக்கண்ணில் கறை வைத்தால் 
இடுக்கண் வருகையில் நோவது எவர் குற்றம்?

நாலாம் தூண் ஒளித்து வைத்த 
நாலாம் சிம்மம் 
தூணிலும் துரும்பிலும் துலங்கிடும்
கொடுங்கோன்மை வதைக்க வெளிவராது 
பதுங்கியதில் கிளம்பும் 
ஜனநாயகம் மறுக்கும் நாத்திகம்!

எழுதியவர் : Omkumar (2-Mar-18, 3:55 am)
சேர்த்தது : omkumar
பார்வை : 88

மேலே