முதுமைகண்ட மதுவாய்நானும் புதுமைகொண்ட பதுமையவளும்

செறுவிளை குழல்சூடி மெல்லிடையில் உடைமறைத்து
குறுநகை நிழலாடி புல்தரையில் நடைபயில...

கருவிழி நெருஞ்சிபேல பார்த்துவரும் குறிஞ்சிப்பாட்டு
இருசெவி அருகில்வந்து சேர்ந்ததென்ன அறிவொளியே...!

வெண்சங்கு பெண்ணுருவே பண்பாடும் தொண்நடையே
விண்தொட்டு மண்சேரா வண்ணமிகை எண்ணுருவே...!

இலையுடுத்தும் மலைக்கள்ளன் குலைமண்ணை கலையாக்க
நிலைகொண்டேன் விலைகாண அலையாடும் சிலைவடிவே...!

புண்ணியபூமி கண்ணம்பூசிய திண்ணம்மிகை வண்டல்புழுதி
கண்மணிநீயும் கண்ணியம்மறந்து கண்டபொழுதே தண்டித்ததேனோ...?

வற்றியஓடை வடுவாக வெற்றிக்கனி சிலருக்கு
சிற்றுண்டி நெடுஞ்சாலை சிற்றின்பம் பலருக்கு...

வாளேந்தி வலம்வரும் வங்கநாட்டு தங்கமகளே
நாளேட்டின் பலமறிந்து எங்கள்குறை எங்குசொல்ல...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Mar-18, 5:32 pm)
பார்வை : 76

மேலே