கடவுளை கண்டேன்

அனைத்தையும் அறிந்த மனமோ!
இந்த கடவுள் யாரேன்று அறிந்ததில்லை
அனைத்தையும் உனர்ந்த ஞானிக்கோ!
இந்த கடவுள் யாரேன்று புறிந்ததில்லை
இது இந்த பூமி பிறந்த போது இருந்த கேள்வி
இதற்கு விடை தேடியவர்கள் அடைந்ததோ தோல்வி
நானோ இந்த பூமியில் இன்று தான் கண் திறந்தேன்
ஆனால் திறந்த நொடியே இதற்கான விடை உணர்தேன்
கண்ணீரில் நிறைந்த அவளது விழிகள்
வலியில் துடித்த அவளது குரள்
என்னை கண்டதும் புன்னகையிட்ட‌ அவளது இதழ்கள்
இத்தனை வலியிலும் வேதனையிலும் என் பிறப்பை என்னி சிரித்தால்
அன்று உணர்ந்தேன் அவள் அன்பே கடவுள் என்று. தாயே!!!

-மனோஜ் குமார்

எழுதியவர் : மனோஜ் குமார்.சு (22-Oct-18, 3:28 pm)
சேர்த்தது : Manoj
Tanglish : katavulai KANDEN
பார்வை : 992

மேலே